ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும் செல்போனில் படம் பிடிப்பு: வாலிபருக்கு வலை

ஜெயங்கொண்டம்,ஏப்.23: ஜெயங்கொண்டம் அருகே பெண்ணை குளிக்கும் போது போட்டோ எடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ஜெயங்கொண்டம் அருகே முத்து சேர்வாமடம் கிராமத்தை சேர்ந்தவர் தனசெல்வம். இவர் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிக்கும் போது தனது செல்போனில் பாத்ரூமில் கையை விட்டு போட்டோ எடுத்துள்ளார். இதனை கவனித்த குளித்துக் கொண்டிருந்த பெண் செல்போனை தட்டி விட்டு கூச்சலிட்டு உள்ளார். பெண்ணின் வீட்டில் இருந்து ஓடி வந்த அவரது குடும்பத்தினர் பெண்ணின் அண்ணன், அம்மா ஓடிவந்து தனசெல்வத்திடம் தட்டி கேட்டனர்.

மேலும் அவரிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்த போது பெண் உடை மாற்றுவது போட்டோ இருந்தது. இதுகுறித்து கேட்டபோது தன செல்வத்தின், தந்தை அப்படித்தான் என் மகன் செய்வான். உன்னால் முடிந்ததை செய் என பெண்ணின் குடும்பத்தினரிடம் மிரட்டி சென்றார். இதுகுறித்து அந்தப் பெண் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின்படி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலை மறைவான தனசெல்வத்தை தேடி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும் செல்போனில் படம் பிடிப்பு: வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: