23ம்தேதி நடக்கிறது ஆம்புலன்ஸில் குவா…குவா…

 

புதுக்கோட்டை, ஏப்.21: புதுக்கோட்டை மாவட்டம் இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் புதுக்கோட்டை அடுத்த சிப்காட் அருகே தேவிக்கு அதிக பிரசவ வலி ஏற்பட்டு ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவ முறையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தாயும் சேயும் நலமுடன் இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இக்கட்டான நிலையில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த தாயையும், சேயையும் நலமுடன் காத்த மாத்தூர் ஆம்புலன்ஸ் இஎம்டி தீபா மற்றும் ஆம்புலன்ஸ் பைலட் பீர்முகமதுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

The post 23ம்தேதி நடக்கிறது ஆம்புலன்ஸில் குவா…குவா… appeared first on Dinakaran.

Related Stories: