பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ

 

பொன்னமராவதி, ஏப்.26: பொன்னமராவதி பேரூராட்சி குப்பைக்கிடங்கில் தீப்பற்றி எரிந்ததை தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பொன்னமராவதி காந்தி சிலை பின்புறம் பேரூராட்சியில் குப்பை கொட்டப்பட்டு வருகின்றனர். இந்த குப்பை கிடங்கில் திடீர் என தீப்பற்றி மலமலவென எரியத்தொடங்கியது இதனால் பொன்னமராவதி நகலே புகை மண்டலமாக காட்சியளித்தனர்.

இதனையடுத்து பொன்னமரவாதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைக்கப்பட்டு தீயணைப்புத்துறையினர் சென்று தீயை போராடி அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிரக்கப்பட்டது. பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் அடிக்கடி இந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிகின்றது. நகரின் மையப்பகுதியில் கடும் வெப்பம் வாட்டி வரும் வேலையில் தீப்பற்றியது. பொன்னமராவதி நகரில் உள்ள பொதுமக்களிடையே அச்சம் ஏற்படுகின்றது. இதனை கட்டுப்படுத்த நிரந்த தீர்வு காணவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ appeared first on Dinakaran.

Related Stories: