புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

 

புதுக்கோட்டை, ஏப்.29: புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முழு முழுவதும் கோடை வெயில் அனலாக அடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் திமுகவினர் நகர் பகுதிகளில் கோடைகால தண்ணீர் பந்தல் திறந்து மக்களின் துயர் நாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தெரிவித்தார். இதனையடுத்து புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் முத்துகருப்பன் ஏற்பாட்டில் நேற்று கோடைகால தண்ணீர்பந்தல் திறக்கப்பட்டது. இதற்கு புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பொதுமக்களுக்கு மோர், பழங்களை மக்களிக்கு கொடுத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்பி அப்துல்லா, நகர செயலாளர் செந்தில், மாநில மருத்துவரணி துணை செயலாளர் அண்ணாமலை, உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். திருமயம்: திருமயம் ஒன்றிய திமுக சார்பில் திமுக கட்சி அலுவலகம் எதிரே தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று காலை திறந்து வைத்தார். தண்ணீர் பந்தலில் நீர் மோர், பானகம், பழங்கள், குளிர்பானங்கள்
உள்ளிட்டவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

The post புதுக்கோட்டையில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: