திருத்துறைப்பூண்டி, பிப்.28: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி, கல்லூரி வளாகம் முன்பு வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழகமாதிரி கல்லூரியில் 36 கவுரவ விரிவுரையாளர்கள், 5 அலுவலக பணியாளர்கள் குறைந்த தொகுப்பூதியத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் கல்லூரி துவங்கியதில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக முதல்வர் சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள் மூலம் இயங்கிவரும் உறுப்பு கல்லூரிகள் அனைத்தும் அரசு கல்லூரியாக மாற்றம் செய்து அறிவித்தது.
இதை தொடர்ந்து புதிய அரசு கல்லூரிகளுக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வரும் கூடுதல் பேராசிரியர்களை பணியிட நிரவல் மூலம் பணியமர்த்தப்பட்டனர். கவுரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.