நீடாமங்கலம், பிப்.28: நீடாமங்கலம் அருகே கடம்பூர் பாமணியாற்று பாலத்தில் கம்பிகள் இல்லாமல் மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்திலிருந்து பாமணியாற்றில், ஒரத்தூர் திருவள்ளுவர் நகர் தஞ்சை சாலையில் இணைகிறதுஇந்த பாலம் வழியாக கடம்பூர், மேலகடம்பூர், பரப்பனாமேடு, வீரவநல்லூர், பூவனூர், மேலபூவனூர், மாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து நீடாமங்கலம் கடை தெருவிற்கு வந்து செல்ல இப்பாலத்தைதான் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல அந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டூவீலர்களி வாகனங்களில் இந்த பாலத்தில்தான் சென்று வருகின்றனர்.