திருத்துறைப்பூண்டி, பிப்.27: திருத்துறைப்பூண்டியி–்ல் குடிசை வீடு தீயில் எரிந்து நாசமானது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியான அபிஷேக கட்டளை பகுதியை சேர்ந்தவர் வாணி(39). சுயஉதவிக் குழுவுக்கு பயிற்சி அளிக்கும் இவர், தனது தாய் மனோரஞ்சிதத்துடன் வசித்து வருகிறார். தற்போது புதிய வீடு கட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியில் கூரை வீட்டில் வசித்து வரும் நிலையில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் கூரை வீடு திடீரென வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. புதிய வீட்டின் மாடியில் போட்டிருந்த கூரை கொட்டகையும் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் முற்றிலும் எரிந்து கரிக்கட்டையானது.