திருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு ரூ.5 லட்சம் நலஉதவி

திருவையாறு, பிப். 27: திருப்பழனத்தில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 72 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருவையாறு அடுத்த திருப்பழனம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி தலைமை வகித்தார். தாசில்தார் இளம்மாருதி முன்னிலை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் இளங்கோ வரவேற்றார். முகாமில் பொதுமக்களிடமிருந்து 208 மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக பிரித்து கொடுக்கப்பட்டு அவர்கள் மூலம் மனுதாரர்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. முகாமில் 72 பேருக்கு ரூ.5,09,339 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், ஒன்றியக்குழு தலைவர் அரசாபகரன் ஆகியோர் வழங்கினர். ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், வருவாய் ஆய்வர் விஜயராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஊராட்சி தலைவர் ஜெயசுதா பிரபாகரன் நன்றி கூறினார்.

Related Stories: