கும்பகோணம், பிப். 27: தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகளை ரத்து செய்யப்படவுள்ளது.இதுகுறித்து கும்பகோணம் கோட்ட தபால் நிலையங்களின் கண்காணிப்பாளர் அஜாதசத்ரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாத தொகையை கையாளுவதற்காக மூத்த குடிமக்கள் நலநிதி விதிகள் 2016 என்ற முறையை அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அதன்படி இந்திய தபால் நிலையங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படாத கணக்குகள் மற்றும் அதில் உள்ள இருப்பு தொகையையும் பொது அறிவிப்பு செய்ய வேண்டுமென அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.