கெங்கவல்லி, பிப்.27: கெங்கவல்லியில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கெங்கவல்லி ஒன்றியத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர்களுக்கு கெங்கவல்லி 2வது வார்டு தொடக்கப்பள்ளியிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வட்டார வள மையத்திலும் நடைபெற்றது. இந்த பயிற்சியை கெங்கவல்லி வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா தொடங்கி வைத்தார். கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலர்கள் வாசுகி, அந்தோணி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.