நிலக்கோட்டை கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

வத்தலக்குண்டு, பிப். 27: நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக நடந்த இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்க, ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டீஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக வத்தலக்குண்டு ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மாதவன், பொருளாளர் காசி என்ற ஜெயராமன், டாக்டர்கள் முருகேசபாண்டியன், சதீஸ்குமார், குருநாதன், பேராசிரியர்கள் ஜெயபிரதா, இக்பால், லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கல்லூரி மாணவிகள் அனைவரும் வாழ்நாளில் 5 மரங்கள் முதல் 50 மரங்கள் வரை நட்டு வளர்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர். கல்லூரி வளாகம் முழுவதும் 100 நிழல் தரும் மரக்கன்றுகள், 200 பழ மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Stories: