சீர்காழியில் மூட்டு நோய் இலவச பரிசோதனை முகாம்

சீர்காழி,பிப். 26: சீர்காழியில் உலக மூட்டு நோய் தினத்தை முன்னிட்டு இலவச மூட்டு நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மூட்டு நோய் பரிசோதனை மருத்துவ முகாமை நடத்தினர். வயது முதிர்வினால் ஏற்படும் மூட்டு நோய் உள்ளவர்கள், முடக்கு வாத நோய் உள்ளவர்கள், கீழ் வாத நோய் உள்ளவர்கள், சிக்கன் குனியா மற்றும் சுவெய்ன் ப்ளூ நோயினால் ஏற்படும் மூட்டு நோய் உள்ளவர்கள், முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கிருமியினால் பாதிக்கப்பட்ட மூட்டு நோய் உள்ளவர்கள், விபத்தினால் பாதிக்கப்பட்ட மூட்டு நோய் உள்ளவர்கள், குதி வாதம் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர். சிறப்பு மருத்துவர்களின் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு மாத்திரைகள் இலவசமாக செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 75க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

Related Stories: