பரமத்திவேலூர், பிப்.26: பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை பிரிவினை மக்கள் பயன்பாட்டிற்கு மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனை 50க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் 10 மருத்துவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, டயாலிசிஸ் என்னும் ரத்த சுத்திகரிப்பு மற்றும் மாரடைப்பு நோயாளிகளுக்கான அவசர சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகள் ஏற்படுத்தக்கோரி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.