பரமத்தி வேலூர், பிப்.26: நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வி சீர் வழங்கும் விழா, விளையாடு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் பள்ளியின் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் பள்ளிக்கு தேவையான டேபிள், சேர், பொருட்கள் மாணவர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை சீர் வரிசையாக ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். இதனை பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி பெற்றுக்கொண்டார்.