புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை ஒன்றியம், மற்றும் கறம்பக்குடி ஒன்றியம், உள்ளடங்கிய கிராமங்களில் குடிநீர், சாலை வசதிகளையும் அமைத்து கொடுக்க வேண்டும் . புதுக்கோட்டை நகர் முழுவதும் குடிநீர், சாலை, மற்றும் பாதாள சாக்கடை முழுமை அடையாததையும் உடன் நடிவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசால் மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் அனுமதி வழங்கப்பட்ட கேந்திர வித்யாலயா பள்ளியை புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மருத்துவமனையின் காலியாக உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதியில் நடத்தவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.