ராஜபாளையம், பிப். 26: ராஜபாளையத்தில் சுதந்திர சிந்தனை இலக்கிய அமைப்பு சார்பில் நூல் வெளியீட்டு விழா நடந்தது. ராஜபாளையத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சுதந்திர சிந்தனை இலக்கிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் இலக்கியம், ஓவியம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆளுமைகளை அழைத்து கலந்துரையாடல் நடத்தப்பட்டு வருகிறது. கலந்துரையாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நூல் வெளியீட்டு விழா காந்தி கலைமன்றத்தில் நடைபெற்றது. கந்தசாமி பாண்டியன் வரவேற்றார். ரமணாலயம் லோகநாத ராஜா தலைமை வகித்தார்.