பெரியகுளத்தில் புத்தாக்க பயிற்சி முகாம்

பெரியகுளம், பிப். 26: பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2020ம் ஆண்டிற்கான அனைத்து தணிக்கையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. பெரியகுளம் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் தர் முன்னிலை வகித்தார். இந்த பயிற்சி முகாமினை மதுரை மண்டல கூட்டுறவு தணிக்கை அலுவலர் சாரதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், தணிக்கையாளர்கள் தங்களது துறையில் சிறப்பாக பணியாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கினார். முகாமில், மண்டல அளவிலான கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டுறவு தணிக்கை அலுவலர் மலர்விழி நன்றி கூறினார்.

Related Stories: