சிதம்பரம், பிப். 26: அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலகுண்டலபாடி ஆற்றின் கரையோரம் சாராயம் விற்றுக்கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் விக்னேஷ் (28) என்பதும், சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்த 120 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது
செய்தனர்.