நெல்லிக்குப்பம், பிப். 25: நெல்லிக்குப்பம் பகுதியில் தென் பெண்ணை ஆறு மற்றும் கெடிலம் ஆற்றில் அரசு அனுமதியின்றி ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். அதனையும் மீறி மாட்டு வண்டி ஓட்டிகள் பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மணலை திருடி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இளைஞர்கள் நூதன முறையில் சாக்கு மூட்டைகளில் மணலை கட்டி பைக்குகள் மூலம் திருடி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வது நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தடுக்கும் வகையில் நேற்று நெல்லிக்குப்பம் போலீஸ்