காங்கயம், பிப்.20: அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க தலைவரும், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையருமான ரமேஷ் தலைமை வகித்தார். இதில், ஊழியர்களின் இடம் மாற்றம் மற்றும் அடிப்படை கோரிக்கைகள் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காததால், விரக்தியடைந்த ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் 25 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.