திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு

 

திருப்பூர், மே 4: திருப்பூர் கேரளா நண்பர்கள் கிரிக்கெட் அசோஷியேஷன் சார்பில் நாளை திருப்பூரில் கேன்சர் விழிப்புணர்வு நிகழ்வு நடக்கிறது. திருப்பூர் கேரளா நண்பர்கள் கிரிக்கெட் அசோஷியேஷன், திருப்பூர் ரீச் பவுண்டேஷன், ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை, திருப்பூர் சைக்கிள் ரைடர்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் கேன்சர் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பேரணி, கிரிக்கெட் போட்டி மற்றும் கருத்தரங்குகள் நடைபெறுகிறது.

இதையடுத்து நாளை காலை 5.30 மணிக்கு தாராபுரம் ரோடு அரசு பொது மருத்துவமனை முன்பு துவங்கும் சைக்கிள் பேரணி, 6.30 மணிக்கு அவிநாசி – பெருமாநல்லூர் 6 வழிச்சாலை அருகில் உள்ள எஸ்கேஎல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்கேஎல் பப்ளிக் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் கேன்சர் விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

பரிசளிப்பு விழாவின் போது, கேன்சர் விழிப்புணர்வு சொற்பொழிவு நடைபெறுகிறது. இதில் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன், ரோட்டரி சங்கத்தினர், கேரளா நண்பர் கிளப் குடும்பத்தார் மற்றும் மொதுமக்கள் கலந்துகொள்கின்றனர்.

The post திருப்பூரில் நாளை கேன்சர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: