கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

 

திருப்பூர்,மே 4: திருப்பூர், ராக்கியாபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அனைப்புதூர் செல்லும் ரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தல் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஆத்விக் குமார் யாதவ் (33) என்பதும், அவர் பெருமாநல்லூர் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு பீகாரில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிந்து ஆத்விக் குமார் யாதவை கைது செய்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த 1 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

The post கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: