வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது

 

காங்கயம், ஏப். 29: காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை கிராமம் நொச்சிக்காட்டுதோட்டத்தை சேர்ந்தவர் தங்கமுத்து (55). இவர், தனது கால்நடைகளுக்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வைக்கோல் புல் கட்டு வாங்கி கொண்டு ஈச்சர் வேனில் ஏற்றி வந்துள்ளார். வேனை கடலூர், அன்புகுமார் (38), ஓட்டி வந்துள்ளார்.

வைக்கோல் வேன் தங்கமுத்து தோட்டம் அருகில் சென்றபோது அருகில் உள்ள மின்சார ஒயர் உரசியதால் வைகோலில் தீப் பற்றி எரிந்தது. உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் வைக்கோல் கட்டுகள் எரிந்து சேதமாகின. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது appeared first on Dinakaran.

Related Stories: