கறம்பக்குடி, பிப்.20: கறம்பக்குடி பகுதியில் தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தொடர் போராட்டங்கள் எதிரொலியாக கறம்பக்குடி மதரஸா பள்ளிவாசல், புலியஞ்சோலை பகுதி பள்ளிவாசல் முன்பு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றும், சட்ட சபையில் அனைத்திற்கும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கறம்பக்குடி குடியுரிமை திருத்த பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு அமைப்பு சார்பாக காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளரும், எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகமத்துல்லா தலைமை வகித்தார். அப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார். இந்த தொடர் தர்ணா போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.