தில்லையாடி

தரங்கம்பாடி, பிப்.20: நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் படிக்கும் 69 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். எம்எல்.ஏ பவுன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் மற்றும் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: