கடலூர், பிப். 19: கடலூர் முதுநகரில் டிவி பார்க்கக்கூடாது என தாய் கண்டித்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் குட்டைகாரன் தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மகள் சினேகா( 18). எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் வீட்டில் உள்ளார். மேலும் வீட்டில் அடிக்கடி டிவி பார்ப்பது வழக்கம். கடந்த 9ஆம் தேதி வழக்கம்போல் சினேகா வீட்டு வேலை எதுவும் செய்யாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இதனால் சினேகாவின் தாய் அவரை வீட்டு வேலை ஏதும் செய்யாமல் இப்படி டிவி பார்க்கிறாயா என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சினேகா தற்கொலை செய்ய முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.