மது விற்றவர் கைது

போடி சிலமலை புதுக்காலனியில் அனுமதியின்றி மது விற்பதாக போடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அதே காலனியை சேர்ந்த கணேசன் (36) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: