பனமரத்துப்பட்டி, ஏற்காடு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

சேலம், பிப்.19:சேலம் கிழக்கு மாவட்டம் பனமரத்துப்பட்டி மற்றும் ஏற்காடு ஒன்றியத்திற்கான திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பனமரத்துப்பட்டி மற்றும் ஏற்காடு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் கிழக்கு மாவட்டத்தில், ஒன்றிய கழகப் பணிகள் செவ்வனே நடைபெறும் வகையில், பனமரத்துப்பட்டி ஒன்றிய பொறுப்பாளராக, பூலாவரி சோலைக் கவுண்டர் தோட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் மற்றும் ஏற்காடு ஒன்றிய பொறுப்பாளராக செம்மநத்தம் கிராமத்தை சேர்ந்த தங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். ஏற்கனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என அந்த அறிவிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: