சேலம், பிப்.19: மகா சிவராத்திரியை முன்னிட்டு, சேலம் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சார்பில், பண்டிகை நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரும் 21ம் தேதி மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சேலத்தில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும், மேட்டூரிலிருந்து கொளத்தூர், பாலாறு வழியாகவும், தர்மபுரியிலிருந்து மேச்சேரி, மேட்டூர் வழியாகவும் மாதேஸ்வரன் மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.