நாமகிரிப்பேட்டையில் ₹5 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டை, பிப்.19: நாமகிரிப்பேட்டை வேளாண் சங்கத்தில் ₹5 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் நடந்தது. நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன் படி, நேற்று நடந்த மஞ்சள் ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்து விற்பனைக்காக குவித்தனர்.

அதேபோல ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சளை வாங்க வியாபாரிகள் திரண்டனர். மொத்தம் 130 மூட்டை மஞ்சள் விற்பனைக்கு வந்தது. விரலி மஞ்சள் 100 மூட்டை, உருண்டை மஞ்சள் 29 மூட்டை, பனங்காலி மஞ்சள் 1 மூட்டை என மொத்தம் 130 மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டன. விரலி ரகம் குவிண்டால் ₹6,105 முதல் ₹7,390 வரையிலும், உருண்டை ரகம் குவிண்டால் ₹5,165 முதல் ₹5,865 வரையிலும், பனங்காலி ரகம் குவிண்டால் ₹9,695 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் 130 மூட்டை மஞ்சள் ₹5 லட்சத்திற்கு விற்பனையானது.

Related Stories: