திருத்துறைப்பூண்டி, பிப்.19:விட்டுக்கட்டி-வரம்பியம் சாலையை விரைவில்
சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் ஊராட்சியில் விட்டுக்கட்டி - வரம்பியம்- கடியாச்சேரி வரை 3.5 கிலோமீட்டர் சாலை அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். குண்டும் குழியுமான சாலையாக மாறி பல ஆண்டுகள் இருக்கும். இதனால் இச்சாலையில் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக மினி பேருந்துகள் இயங்கி வந்தது, சாலை மோசமானதால் பேருந்துகள் இந்த வழியாக சென்று வருவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.