திருத்துறைப்பூண்டி, பிப்.19: திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பாலு தலைமை வகித்தார். ஆசிரியை உஷா வரவேற்றார்.கருத்தரங்கில் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் ஜீவானந்தம் பேசுகையில், பெண்களின் நலன் சார்ந்த மற்றும் பாதுகாப்பு சம்பந்தமானது நலன் சார்ந்த விஷயத்தில் சத்தான உணவுகள், சிறுதானிய உணவான கேழ்வரகு, கம்பு, தினை போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும். செல்போன், டிவி நிகழ்ச்சிகளை தவிர்த்து ஜெயித்துக் காட்ட வேண்டும் என்றார்.