நாகை,பிப்.19: பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து பதனீர் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பதனீர் இறக்கி விற்பனை செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும் அவ்வாறு பதனீர் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டினர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போலீசாரை கண்டித்து வரும் 20ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து நேற்று நாகை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.இதில் நாடார் மக்கள் பேரவை மாநில தலைவர் ராஜா, புதுச்சேரிமாநில நாடார் மக்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ், நாகை மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகை தாசில்தார் பிரான்சிஸ் முன்னிலையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் நாகை, நாகூர் போலீசாரும் கலந்து கொண்டனர். இறுதியாக அரசு விதிமுறைகளின் படி பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதனீர் இறக்குவதற்கு அனுமதி உள்ளது.