போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் தூய்மை பணி

ஓமலூர், பிப்.18: ஓமலூர் காவல் நிலைய பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் உள்ளதால், விபத்து மற்றும்  பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் காவல் நிலைய  வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் செடிகள் முளைத்து புதர்மண்டியது. இந்தநிலையில், ஓமலூர் காவல் நிலைய வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் அப்துல்கலாம் கனவு சிறகுகள் மன்ற இளைஞர்கள்  களமிறங்கினர். அவர்கள் பழைய வாகனங்கள்  மீது படர்ந்திருந்த செடி, கொடிகளை முழுமையாக அகற்றினர். ஆங்காங்கே கிடக்கும் இருசக்கர  மற்றும் ஓரிடத்தில் வரிசையாக அடுக்கி வைத்தனர். மேலும்,  பெரிய வாகனங்களை பழைய கட்டிடத்தின் பின்புறம் நிறுத்தி வைத்தனர்.

Related Stories: