திருவாரூர், பிப்.18: திருவாரூர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக தன்னார்வ அமைப்பு ஒன்று சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு பத்து ரூபா இயக்கம் என்ற பெயரில் இயங்கி வரும் தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு அமைப்பு சார்பில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தாமரைச்செல்வன் மற்றும் பொறுப்பாளர்கள் நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றினை அளித்தனர்.