சிங்கம்புணரி, பிப்.17: போதிய பராமரிப்பு இல்லாததால் சிங்கம்புணரியில் உள்ள சிறுவர் பூங்காவில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாக கிடக்கின்றது. சிங்கம்புணரி மேலூர் சாலையில் சிறுவர் பூங்கா உள்ளது. விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள் என ஜொலித்த இப்பூங்கா கடந்த சில ஆண்டுகளாக உரிய பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து வருகிறது. குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் உடைந்து இருந்த இடம் தெரியாத நிலை உள்ளது. இதனால் விடுமுறை நாட்களில் மாணவர்கள் விளையாட்டு உபகரணங்கள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.