பெரம்பலூர், பிப்.17: பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கழகத்தின் சார் பாக 42வது பரிசளிப்பு மற் றும் பாராட்டுவிழா நடைபெ ற்றது.
பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக, 42வது பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, சங்குப்பேட்டை அருகே உள்ள ராசி திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவ ட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் மணி, மாவட்டப் பொருளாளர் துரை ஆகியோர் முன்னி லை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர பாண்டியன் வரவேற்றார். விழாவில் கலைசுடர்மணி வாசு கலந்துகொண்டு, கட ந்தஆண்டு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெ ண்பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீதத் தேர்ச்சி அளித்த ஆசிரியரு க்கும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.