கறம்பக்குடி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் 24மணி நேரமும் செயல்படும் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்

கறம்பக்குடி, பிப்.17: கறம்பக்குடி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் அளவிற்கு போதிய மருத்துவர்களை நியமிக்க ேவண்டும் என மனிதஜனநாயக கட்சி வலியுறுத்தி உள்ளது.கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைந்த செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் மேற்கு மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி செயலாளர் முகம்மது ஜான் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அக்கட்சி துணை பொது செயலாளர் ஜெய்ன்லாபுதின், மாநில துணை செயலாளர் துரைமுகம்மது , கிழக்கு மாவட்ட செயலாளர் அறந்தை முபாரக் , தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் வரும் 29ம் தேதி அன்று மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெறும் வாழ்வுரிமை மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது என்றும் இந்தியாவிலேயே சிறந்த சட்ட மன்ற உறுப்பினர் என்ற விருதை பெற இருக்கும் கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரிக்குக் கூட்டத்தில் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வது கறம்பக்குடி காந்தி பூங்கா அருகே இடம் ஒதுக்கியும் புதிய நூலக கட்டிடம் கட்டி தர வலியுறுத்தி அருகில் உள்ள மகாத்மா காந்தியிடம் மனு கொடுக்கும் போராட்டம் விரைவில் நடத்தப்படும். கறம்பக்குடி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் அளவிற்கு போதிய மருத்துவர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். மேலும் மருத்துவ மனையில் மின் விளக்குகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர சுகாதாரத்–்துறை அமைச்சரை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட ,ஒன்றிய ,நகர மனித நேய ஜன நாயக கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Related Stories: