மன்னார்குடி, பிப். 12: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சவளக்காரனில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் தொ டர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திமுக உள்ளி ட்ட அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். அதன் ஒரு பகுதியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலி யுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மன்னார்குடி அருகே சவளக் காரன் ஊராட்சியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.