தஞ்சை, பிப்.12: தஞ்சாவூர் கீழவாசல் சுண்ணாம்புத்தூர் தெருவில் வசிப்பவர் எம்.பாலசுந்தரம் இவரது மகள் வித்தியசியமளா. வயது (16) தஞ்சையில் தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் மிகவும் ஆர்வம் பல இடங்களில் நடைப்பெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சை கமலா சுப்பிரமணியம் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.