பொன்னமராவதி, பிப். 11: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் தேவையான உதவி உபகரணங்கள் அலிம்கோ நிறுவனம் மூலம் வழங்குவதற்கு சிறப்பு மதிப்பீடு முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் தலைமை வகித்தார். தனி தாசில்தார் சங்கரகாமேஸ்வரன் முன்னிலை வகித்தார்.