கரூர், பிப். 12: மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் ஆசிரியைகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், கரூர், தாந்தோணிமலை, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய கல்வி வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.