கரூர், பிப். 12: கரூர் மில்கேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலையின் மையப்பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுங்ககேட் முதல் வெங்ககல்பட்டி வரை சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில் சாலையோரம் இருந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சுங்ககேட் வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு தற்போது வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள தாந்தோணிமலையை சுற்றிலும் கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் போன்ற அனைத்து அலுவலகங்களும் இந்த பகுதியில் உள்ளதால் வாகன போக்குவரத்தும் அதற்கேற்ப நடைபெற்று வருகிறது.