கரூர் மாநகராட்சி பள்ளியில் ரூ.3 கோடியில் முதல்வர் படைப்பகம்

 

கரூர், மார்ச் 14: கரூர் மாநகராட்சி பள்ளியில் ரூ. 3 கோடியில் முதல்வர் படைப்பகத்தை கரூர் மாவட்ட கழக செயலாளர் விசெந்தில்பாலாஜி எம்.எல்.ஏ., திறந்துவைத்தார்.
கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ3. கோடி மதிப்பில் முதல்வர் படைப்பக கட்டிடம் 2152 சதுர அடி நிலப்பரப்பில் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு மேயர் கவிதா கணேசன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சிக்கு ஆணையர் கே.எம்.சுதா, துணை மேயர் தாரணி சரவணன், மாநகரச்செயலாளர் எஸ்.பி.கனகராஜ், மண்டலத் தலைவர் கா.அன்பரசன், மாநகராட்சி பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தனர்.

Related Stories: