பொள்ளாச்சி. பிப்.12: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ரூ.20.92லட்சத்துக்கு கொப்பரை ஏலம்போனது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. இந்த ஏலத்தின்போது, ஆனைமலை, கோட்டூர், அம்பராம்பாளையம், கோபாலபுரம், ஒடையக்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 88 விவசாயிகள் 511 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர். அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர் (பொ) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில், முதல் தரம் 269 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.100.60 முதல் அதிகபட்சமாக ரூ.105.25 வரையிலும். இரண்டாம் தரம் 242 மூட்டை கொப்பரை ஒரு கிலோ ரூ.50.60 முதல் ரூ.75வரையிலும் என விவசாயிகள் கொண்டு வந்த, மொத்தம் 25.5டன் கொப்பரை ரூ.20.92லட்சத்துக்கு ஏலம்போனது. இதை 10 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.