விருதுநகர், பிப்.11: விருதுநகர் அண்ணாநகர் வாழ் பறையர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரோசல்பட்டி ஊராட்சி அண்ணாநகரில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 100 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா 1979ல் வழங்கப்பட்டது. பயனாளிகளுக்கு 9 மீ பொதுப்பாதையும் ஒதுக்கப்பட்டது. பொதுப்பாதை தொடர்பாக விவரங்கள் அரசு ஆவணங்களில் உள்ளது. பொதுப்பாதை அருகில் உள்ள தங்கமணி காலனியில் உள்ள 6 மீ பொதுப்பாதை இணையும் இடத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக்கூடாது என்ற நோக்கில் 10 அடி உயர தடுப்புச்சுவர் தனிநபரால் எழுப்பப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்’ என மனுவில் தெரிவித்துள்ளனர்.