சிங்கம்புணரி, பிப். 11: சிங்கம்புணரி யூனியன் கூட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் முறையாக விநியோகம் செய்து குடிநீர் பிரச்னையை தீர்ப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் திவ்யா தலைமை வகித்தார். பிடிஓ பத்மநாபன், துணைத்தலைவர் சரண்யா முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள் உமா, பெரிய கருப்பி, இளங்குமார், கலைச்செல்வி, சசிக்குமார், சத்தியமூர்த்தி, உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சிங்கம்புணரி ஒன்றியத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அனைத்து கிராமங்களுக்கும் சம தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.