தாரமங்கலம், பிப்.11: தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தேர்திருவிழாவின் போது, இளைஞர்களிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் நகை கடை உள்ளிட்ட கடைகளின் கண்ணாடி மற்றும் லைட்டுகள் அடித்து நொறுக்கப்பட்டது. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோயிலில், தைப்பூச தேர் திருவிழா கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று 3வது நாள் கடைசி நிகழ்ச்சி என்பதால், தேர் திருவிழா விமர்சையாக நடந்தது. நேற்று மாலை இறுதிநாள் தேரோட்டம் நடந்தது. கடந்த 2 நாட்களாக இழுக்கப்பட்டு வந்த தேரை, கோயில் முன்பு நிலை நிறுத்துவதற்காக, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் இழுத்து வந்தனர்.