ஒரத்தநாடு, பிப்.7: ஒரத்தநாடு ஒன்றியக்குழு முதல்கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நீதிமன்றம் மூலம் போராடி வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அதிமுக கவுன்சிலர்கள் வரவேற்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியகுழு முதல் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் திமுக ஒன்றியகுழு தலைவர் பார்வதி சிவசங்கர் தலைமையிலும், ஒன்றிய ஆணையர் விஜய் முன்னிலையிலும் நடந்தது. ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட 31 உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் தலைமை வகித்து பேசிய ஒன்றியக்குழு தலைவர் பார்வதி, அனைத்து உறுப்பினர்களும் பாரபட்சமின்றி நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒன்றியத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து கூட்டத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கண்ணன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக நீதிமன்றம் மூலம் போராடி வெற்றி பெற்றார் என்பதாலும்,