தூத்துக்குடி, பிப்.7: தூத்துக்குடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பறக்கும்படை தனி தாசில்தார் நல்லசிவம் தலைமையிலான குழுவினர் மாப்பிள்ளையூரணி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள முல்லைநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே ஒரு குடோன் போன்ற பகுதியில் அதிரடி சோதனையிட்டனர்.அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தலா 50 கிலோ அரிசி கொண்ட 30 மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.